டிப்ளமா படிப்பு, 'அட்மிஷன்' 10ம் தேதி பதிவு துவக்கம்

சென்னை: தொடக்க கல்விக்கான, டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு, நாளை மறுநாள் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.


பிளஸ் 2 முடித்தவர்கள், தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, டிப்ளமா படிக்கலாம். டி.எல்.எட்., என்ற, இந்த படிப்பை, பள்ளி கல்வி துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்துகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதேபோல், 250க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் இயங்குகின்றன.

இவற்றில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டில், டிப்ளமா படிப்பில் சேர விரும்புவோர், நாளை மறுநாள் முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதன் விபரங்களை, www.tnscert.org என்ற இணையதளத்தில், அன்று முதல் தெரிந்து கொள்ளலாம்.