பணிக்குச் செல்லும் பெண்களுக்குப் பலன் தரும் 10 ஆசனங்கள் ... சர்வதேச யோகாதினப் பகிர்வு! #WorldYogaDay

`அர்த்த' என்றால் `பாதி' என்று பொருள். `மத்ஸ்ய' என்றால் `மீன்'. மீனைப்போல வளைந்து முதுகுத்தண்டு வடத்தை திருப்புவதன்மூலம் உடல் முழுவதும் இறுக்கம் தளர்ந்து புத்துணர்ச்சி ஏற்படுவதை உணரலாம். இது யோக

சூத்திரம் வலியுறுத்தும் மிக முக்கிய ஆசனமாகும். இந்த ஆசனத்தைச் செய்வதால், முதுகுத் தண்டுவடம் சீராகச் செயல்படும்.
பணிக்குச் செல்லும் பெண்களுக்குப் பலன் தரும் 10 ஆசனங்கள் ... சர்வதேச யோகாதினப் பகிர்வு! #WorldYogaDay
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் தங்களின் உடல் நலனைப் பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள், காலை முதல் மாலை வரை வேலைசூழ் உலகிலேயே வாழ வேண்டியிருக்கிறது. அலுவலகத்தில் உழைப்பதோடு, வீடுகளில் இல்லத்தரசியாகவும் தங்களின் கடமையை நிறைவேற்ற வேண்டியதுள்ளது. இதனால் மிக எளிதாக மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றோடு உயர் ரத்தஅழுத்தம் முதலிய பல்வேறு உடற்சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர். இவற்றையெல்லாம் போக்க அவர்களுக்கு அருமருந்தாகத் திகழ்வது 'யோகா.' "தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி யோகாசனம் செய்தால், பல உடற்சிக்கல்களிலிருந்து மீண்டு நலம் பெறலாம்" என்கிறார் யோகாச்சாரிணி பபிதா ராய்.
 à®¯à¯‹à®•à®¾
யோகக்கலையின் தலைநகராகத் திகழும் ரிஷிகேஷில் பிறந்தவர் பபிதா ராய். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் அதிக ரத்தஅழுத்தம் மற்றும் காரணமற்ற பயத்தால் அவதிப்பட்டிருக்கிறார். அப்போது இவரின் உறவினர் ஒருவர், `யோகாசனம் கற்றுக்கொண்டால் பக்க விளைவுகளற்ற நிரந்தர தீர்வைப் பெறலாம்' என்று கூறியிருக்கிறார். அதன்படி பபிதா ராயை அவரின் கணவர் யோகாசன வகுப்பில் சேர்த்துவிட, யோகாவை மிகவும் ஆர்வத்தோடு கற்றுக்கொண்டார் பபிதா. அன்று முதல் இன்றுவரை யோகாசனத்தின் மூலம் தன்னுடையை உடல், மன பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் இவர், யோகாசன வகுப்புகள் மற்றும் முகாம்கள் நடத்தி வருகிறார். பதஞ்சலி முனிவர் சொன்ன யோக சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, பணிக்குச் செல்லும் பெண்களும் இல்லத்தரசிகளும் தினமும் அவசியம் செய்ய வேண்டிய யோகாசனங்களை விளக்குகிறார் யோகாச்சாரிணி பபிதா ராய்.
சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படும் சூழலில், பெண்கள் தங்கள் உடல்நலனை காத்துக்கொள்ள எளியமுறையில் செய்யக் கூடிய யோகாசனங்கள் பற்றிக் கூறுகிறார்.
 à®…ர்த்த மத்ஸ்யாசனம்
அர்த்த மத்ஸ்யாசனம்
`அர்த்த' என்றால் `பாதி' என்று பொருள். `மத்ஸ்ய' என்றால் `மீன்.' மீனைப்போல வளைந்து முதுகுத் தண்டுவடத்தைத் திருப்புவதன்மூலம் உடல் முழுவதும் இறுக்கம் தளர்ந்து புத்துணர்ச்சி ஏற்படுவதை உணரலாம். இது யோக சூத்திரம் வலியுறுத்தும் மிக முக்கிய ஆசனமாகும்.
இந்த ஆசனத்தைச் செய்வதால், முதுகுத் தண்டுவடம் சீராகச் செயல்படும்; செரிமானக் கோளாறுகள் நீங்கும். அத்துடன் மூச்சுக் குழாய் பிரச்னைகள் தீர்வதுடன் ரத்தத்தைச் சுத்திகரிக்க பெரிதும் உறுதுணையாக இருக்கும்.
 
வீரபத்ராசனம்
இந்த ஆசனத்தைச் செய்வதன் மூலம் போர் வீரர்களைப் போன்ற உறுதியான உடலமைப்பைப் பெற முடியும். பலமணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் அவசியம் இந்த ஆசனத்தைப் பயில வேண்டும். 'வீரபத்ராசனம்' செய்வதால் தோள்பட்டை, தொடை, கால் உறுதியடையும். மன இறுக்கம், உடல் இறுக்கம் மிக எளிதாகச் தளர்ச்சியடையும்.
 à®šà®•à¯à®°à®¾à®šà®©à®®à¯Â 
சக்ராசனம்
உடலை பின்பக்கமாக சக்கரம்போல் வளைப்பதே 'சக்ராசனம்'. இந்த ஆசனத்தைச் செய்வதால் மூச்சுக் குழாய் மற்றும் மார்பு விரிவடையும். வயிறு, வயிற்றின் பின்புறம் மற்றும் மணிக்கட்டுப் பகுதிகள் உறுதிபெறும். தைராய்டு பிரச்னைகள் சரியாகும்.
 à®µà®¿à®°à¯à®Ÿà¯à®šà®¾à®šà®©à®®à¯
விருட்சாசனம்
 `விருட்சம்' என்றால் `மரம்'. இந்த ஆசனத்தைச் செய்தால் மரத்தைப்போன்று உறுதியான கால்களைப் பெறலாம். கண் மற்றும் செவிப்பறை சார்ந்த பிரச்னைகள் சரியாகும். இடுப்பு வலி குணமாகும்; முழங்கால்கள் வலுவடையும். அத்துடன் நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.
நடராஜாசனம்
நடராஜாசனம்
 à®®à®¾à®²à®¾à®šà®©à®®à¯
நடராஜரைப்போல ஒரு காலை மட்டும் தூக்கிக்கொண்டு செய்யவதால் இதற்கு நடராஜாசனம் என்று பெயர். இந்த ஆசனத்தைச் செய்வதால், கால்கள் உறுதிபெறும். தோள், மார்பு, வயிறு, தொடைப்பகுதியின் இறுக்கம் தளரும். உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய உன்னதமான ஆசனம் இது.
உஷ்ட்ராசனம்
மாலாசனம்
சம்மணமிட்டு அமர்வதற்கு மாறாக, அதேநிலையில் உடலை மேலே தூக்கி அமரும் நிலை. பலமணி நேரம் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது. இந்த ஆசனத்தைச் செய்வதால், மலம் எளிதாக வெளியேறும்; தொப்பை குறையும். தொடை மற்றும் பின்முதுகின் கீழ்புறம் சரிவர இயங்கும்.
உஷ்ட்ராசனம்
உஷ்ட்ராசனம்
உஷ்ட்ர' என்றால் `ஒட்டகம்' என்று பொருள். ஒட்டகத்தின் உடலமைப்பைப் பிரதிபலிக்கும் ஆசனம் இது. ரத்த ஓட்டம், முதுகு வலி, நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் நிரந்தரமாக நிவாரணம் பெற இந்த ஆசனம் உதவும். `உஷ்ட்ராசனம்' உஷ்ட்ராசனம் செய்தால் மூச்சுக்குழாய் பிரச்னைகள் சரியாகும். கழுத்து, தோள், அடிவயிற்றுக் கோளாறுகள் விலகும். பின்பக்கத் தசைகள் உறுதிபெறும். ஆஸ்துமா நோயாளிகள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது.
பர்வதாசனம்
பர்வதாசனம்
இந்த ஆசனம் செய்யும்போது பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது மலையைப்போன்று உடலமைப்பு தோற்றமளிப்பதால் இதற்கு 'பர்வதாசனம்' என பெயர். `பர்வதாசனம்' செய்தால், தொடை மற்றும் கால்கள் உறுதியடையும். முதுகுத் தண்டுவடத்துக்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். மூளைக்குச் செல்லும் ரத்தஓட்டம் சீராகும்.
பதாங்குஷ்டாசனம்
பதாங்குஷ்டாசனம்
இந்த ஆசனம் செய்வதால், உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள தசைகள் வலுப்படும். மேலும் அப்போது உடலை பேலன்ஸ் செய்வதில் முழு கவனம் செலுத்த வேண்டும். `பதாங்குஷ்டாசனம்' செய்தால் முழு உடலின் இறுக்கம் தளரும். மனக்கிளர்ச்சி மற்றும் ரத்தஅழுத்தம் கட்டுப்படும். கவனச்சிதறல் இல்லாமல் பணிபுரிய உதவும்.
அர்த்த கபோடாசனம்
அர்த்த கபோடாசனம்
இந்த ஆசனம் செய்யும்போது புறாவைப் போன்ற தோற்றம் இருக்கும். இந்த ஆசனத்தைச் செய்வதால் அந்தரங்க உறுப்புகள் வலுவடையும். அடிவயிறு, தொடை, முதுகுப் பகுதி தசைகள் இளகும்'' என்கிறார் பபிதாராய்