ஆசிரியர் பல்கலைக்கு பதிவாளர் நியமனம்

சென்னை, :தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் பதவி,
மூன்றுமாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது.அதேபோல, பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகளும் காலியாக உள்ளன.இந்நிலையில், பல்கலை பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு துறைத்தலைவரான, பேராசிரியர் பாலகிருஷ்ணன் பதிவாளராக நியமிக்கப் பட்டுள்ளார் கல்வி உளவியல் துறைத் தலைவரான, பேராசிரியர் கோவிந்தன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்.