'டான்செட்' தேர்வு அவகாசம் நீட்டிப்பு

சென்னை,இன்ஜினியரிங்கல்லுாரிகளில் எம்.இ. உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில்
சேருவதற்கான 'டான்செட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் எம்.பி.ஏ. - எம்.சி.ஏ. - எம்.இ. - எம்.டெக். - எம்.ஆர்க். - எம்.பிளான். படிப்புகளில் சேர தமிழக அரசின் பொது நுழைவு தேர்வான 'டான்செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது மே 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது