உதவி பொறியாளர் பணிக்கான தேர்வு: அடுத்த வாரம், 'ரிசல்ட்'

தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து, உதவி பொறியாளர் பணிக்கான தேர்வு முடிவை, மின் வாரியம், அடுத்த வாரம் வெளியிட உள்ளது.


தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு வாயிலாக ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான தேர்வு, 2018 இறுதியில் நடந்தது.அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில், நேர்காணல் இன்றி, எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தவர்கள், வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

லோக்சபா தேர்தலால், தேர்வு முடிவை வெளியிட முடியவில்லை. ஓட்டுப்பதிவு முடிந்ததை அடுத்து, தேர்வு முடிவை வெளியிட, தேர்தல் ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கோரியது.இதுகுறித்து, நமது நாளிதழிலும், சமீபத்தில் விரிவான செய்தி வெளியானது.

இந்நிலையில், தற்போது முடிவை வெளியிட, ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.எனவே, எழுத்து தேர்வு முடிவுகளையும், அதில், வேலைக்கு தேர்வு செய்யப்பட்டநபர்களின் விபரங் களையும், மின் வாரியம்,அடுத்த வாரம், அதிகாரபூர்வமாகவெளியிட முடிவு செய்துள்ளது.
- நமது நிருபர் -