ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை; சென்னை ஐகோர்ட்

சென்னை ; தமிழகத்தில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை ஐகோர்ட்.


கிருஷ்ணகிரியை சேர்ந்த பரமானந்தம் மற்றும் சக்திவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், '' ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது சட்டத்திற்கு எதிரானது. எனவே, தமிழகத்தில் வரும் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யவேண்டும்,'' என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை இன்று (மே 30) விசாரித்த சென்னை ஐகோர்ட், '' தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத உள்ள நிலையில், தேர்வுகளை ரத்துசெய்ய இயலாது,'' என்று அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்று, பரமானந்தம் மற்றும் சக்திவேல் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.