அரசு பள்ளியில் முறைகேடு பெற்றோர் சங்கம் கோரிக்கை

காரைக்கால்:திருவேட்டக்குடி அரசு பள்ளியில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ள பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் சார்பில் கல்வித்துறை செயலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:திருவேட்டக்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை கல்வி சுற்றுலா அனுப்பவும், பள்ளியின் வளர்ச்சிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காக உரிய கோப்புகள் பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடுகள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும்.மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. கல்விச்சுற்றுலா மற்றும் கல்வி உதவித் தொகைகளை கல்வியாண்டு தொடக்கத்தில் வழங்காமல் மார்ச் மாதத்தில் வழங்குவதால் மாணவர்களுக்கு பயனில்லாமல் போகிறது. மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.