இன்ஜி., 2ம் ஆண்டு நேரடியாக சேர வாய்ப்பு

சென்னை:தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதிவாய்ந்த பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, டிப்ளமா மற்றும் பி.எஸ்.சி., பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், நேரடியாக, இரண்டாம் ஆண்டு, பொறியியல் பட்டப் படிப்பில் சேரலாம். நடப்பு கல்வியாண்டில், அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை, அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகள் ஆகியவற்றில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.www.accet.co.in, www.accetedu.in, www.accetlea.com போன்ற இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
'ஆன்லைனில்' விண்ணப்பித்த பின், அதை பிரதி எடுத்து, உரிய ஆவணங்கள் மற்றும் பதிவு கட்டணத்துடன், அனுப்பி வைக்க வேண்டும்.இணையதளம் வழியே, 17ம் தேதி முதல், ஜூன், 16 வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு, பி.இ., - பி.டெக்., சேர்க்கை, 2019 - 20, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, காரைக்குடி - 630003' என்ற முகவரிக்கு, ஜூன், 16 மாலை, 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.