பிளஸ் 1 தேர்ச்சி பெறாதோர் சிறப்பு தேர்வு எழுத வாய்ப்பு

சென்னை:பிளஸ் 1 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு தேர்வுக்காக, இன்று முதல், 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள், இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன.

இந்த தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து பங்கேற்காதவர்கள், ஜூன், 14ல் துவங்கும் சிறப்பு தேர்வை எழுதலாம்.இதற்கு, இன்று முதல், 14ம் தேதி மாலை, 5:45 மணி வரை,ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள், தனி தேர்வர்கள், தங்களின் தேர்வு மையங்களின் வாயிலாக, தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் பிரவுசிங் மையங்கள் வழியாக விண்ணப்பிக்கமுடியாது.தனி தேர்வர்கள் பாடத்துக்கு, தலா, 50 ரூபாய், இதர கட்டணம், 35 ரூபாய் செலுத்த வேண்டும்.இதுதவிர, ஆன்லைன் பதிவு கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.கூடுதல் விபரங்களை,www.dge.tn.gov.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த தகவலை, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தரா தேவிதெரிவித்து உள்ளார்.