தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நாளை (ஏப்.25) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 26ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும். ஏப்.27, 28 தேதிகளில் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். ஏப்., 26 முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.