புகையிலைபொருள் விற்பனை: ஆசிரியர்களுக்கு புது உத்தரவு

சென்னை:பள்ளி அருகே புகையிலைபொருள், சிகரெட் விற்பவர்கள் குறித்து தலைமைஆசிரியர்கள் போலீசிடம் தகவல் தெரிவிக்கவேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவில் கூறியிருப்பதாவது:பள்ளி அருகே புகையிலைபொருள், சிகரெட் விற்பனை குறித்து ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்கவேண்டும். இந்த புகையிலைபொருள், சிகரெட் போன்றவற்றில் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும். இப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் விற்பவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள், போலீசிடம் புகார் தெரிவிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.