அப்துல்கலாம் பள்ளியில் பரிசளிப்பு விழா

நெட்டப்பாக்கம்:மடுகரை அப்துல்கலாம் மெமோரியல் ஆங்கில பள்ளியில் பரிசளிப்பு
விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி நிர்வாகி கதிர்வேல் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் அன்னபூரணி முன்னிலை வகித்தார். பள்ளியில் நடந்த அபாகஸ் தேர்வு, ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மடுகரை அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் (ஓய்வு) ஜெயபால் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.