பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திண்டிவனத்தை சேர்ந்த அஞ்சலி தேவி தனது மகள் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்ததற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா இதுதொடர்பாக ஏப்.29ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
திண்டிவனத்தை சேர்ந்த அஞ்சலி தேவி தனது மகள் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்ததற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா இதுதொடர்பாக ஏப்.29ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.