தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை: இன்றும் மழைக்கு வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: தமிழகத்தில் பரவலாக நேற்று லேசான மழை முதல் பலத்த மழை பெய்து, பூமியை குளிர்வித்துள்ளது.

நாமக்கல், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, கோவை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களைத் தவிர உள் மற்றும் தென் தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடுவெதர்மேன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நேற்றைய தினம் மிகச் சிறந்த நாளாக அமைந்தது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென் பகுதி, மேற்கு மற்றும் வட தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களும் இன்று இந்த மழை விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் பெய்திருக்கும் மழை நிலவரம். (மில்லி மீட்டரில்)

ராஜபாளையம், விருதுநகர் - 120
நாமக்கல் - 88
கீழ் கோடையாறு, கன்னியாகுமரி - 78
கொடைக்கானல், திண்டுக்கல் - 58
தாராபுரம், திருப்பூர் - 26
சேலம் - 23
சத்தியமங்கலம், ஈரோடு - 17
கள்ளக்குறிச்சி, மதுரை - 13
அரவக்குறிச்சி, கரூர் - 10
வால்பாறை, கோவை - 10