தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்க்மேன் (டிரெய்னி) பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துக்கள்.
பணி: கேங்க்மேன் (பயிற்சி)
காலியிடங்கள்: 5000
தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, இதர பிரிவினர், மி.மி., சி., பி.,பி.(மு) ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf  என்ற வலைத்தளத்தில் அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.06.2019
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2019