மே 1 முதல் ஜூன் 2 வரை சென்னை ஐகோர்ட் கோடை விடுமுறை

சென்னை:சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1 முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் அறிவிப்பில், கோடை விடுமுறையை ஒட்டி, வாரத்தில் திங்கள், செவ்வாய்களில் அவசர கால மனுக்கள் தாக்கல் செய்யலாம். இம்மனுக்கள் புதன், வியாழனில் விசாரிக்கப்படும். இந்த மனுக்களை விசாரிக்க 16 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.