நாளை முதல் வெயில் குறையும்

சென்னை:'மூன்று நாட்களாக நிலவிய வெயில், நாளை முதல், சற்று குறையும்' என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், மூன்று நாட்களுக்கும் மேலாக, வெயில் கொளுத்துகிறது. மாநிலத்தின் பல நகரங்களில், 40 டிகிரி செல்ஷியஸை விட, அதிகமாக வெப்பநிலை பதிவாகிறது. அதாவது, இயல்பை விட, 3 முதல், 5 டிகிரி செல்ஷியஸ், வெப்பம் அதிகரித்துள்ளது. அதேபோல, வடக்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில், அனல் காற்று வீசுகிறது.
இந்நிலையில், நாளை முதல், சில நாட்களுக்கு, வெயிலின் அளவு குறையும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, சேலம், மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில், 41 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. குறைந்தபட்சமாக, கொடைக்கானலில், 22 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.