TNPSC குரூப்-1 தேர்வு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு

மார்ச் 3ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 முதனிலைத் தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. குரூப்-1 தேர்வின் முதன்மை எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


பாடத்திட்டம், தேர்வுத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு எழுத விண்ணப்பிக்காதோருக்கும் அவகாசம் வழங்கப்படுவதாகவும், குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.