JACTTO GEO - போராட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் நல்ல முடிவு - துணை முதல்வர் அவர்கள் அறிவிப்பு

போராட்டத்தில்  ஈடுபட்ட  ஆசிரியர்கள் மீது எடுத்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி நெல்லையில்  துணை முதல்வருடன்   ஆசிரியர்   சங்க பொறுப்பாளர்கள் சந்திப்பு.
இன்று  நெல்லை மாவட்டம் விஸ்வநாதப்பேரிக்கு வருகை புரிந்த துணை முதல்வர் திரு. பன்னீர் செல்வம்  அவர்களை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நேரில் சந்தித்து பணி இடைநீக்கத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கையும் விளக்கி கூறப்பட்டது. அனைத்தையும் விளக்கமாக கேட்ட துணை முதல்வர் அவர்கள் சென்னை திரும்பியதும் முதல்வருடன் கலந்துபேசி நல்ல முடிவு அறிவிக்கிறோம்   என்று தெரிவித்தார்.