அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கல்

மரக்காணம்:மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் அரசு மேல் நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
மரக்காணம், ஓமந்துார், சிங்கனுார், எண்டியூர், அனுமந்தை, நடுக்குப்பம், வேப்பேரி உட்பட ஒன்பது அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 1030 மாணவர்களுக்கும், 1332 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா பிரம்மதேசம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.விழாவிற்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் காமராஜ் வரவேற்றார். ராஜேந்திரன் எம்.பி., மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.சீத்தாபதி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலர் ரவிவர்மன், முன்னாள் சேர்மன் விஜயா அர்ஜூனன், முன்னாள் கவுன்சிலர் குமாரசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி 1087 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார். தலைமையாசிரியர் மார்க்கிரட் வரவேற்றார்.விழாவில் கூட்டுறவு கட்டட சங்க தலைவர் வேணுகோபால், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் குட்டி, முன்னாள் சி.எம்.எஸ்., துணைத் தலைவர் கோபி, இயக்குனர்கள் கரீம், வெங்கடேசன், ஜானி, குப்புசாமி, ரவி, பள்ளி உதவி தலைமையாசிரியர் சுபா உட்பட பலர் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு தலைமை தாங்கி சைக்கிள்கள் வழங்கி பேசினார். கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். விழாவில் சி.எம்.எஸ்., தலைவர் பச்சையாப்பிள்ளை, கூட்டுறவு கட்டட சங்க தலைவர் வேணுகோபால், சி.எம்.எஸ்., இயக்குனர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.