பல மத்திய அரசு ஊழியர்கள் வேலை நாட்களில் விடுமுறைகளை எடுக்காமல் அவற்றைச் சேமித்து ஓய்வு பெறும் போது பணமாகப் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.ஆனால் ஏழாவது ஊதியக் குழு இந்த விதிகளில்
திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
புதிய விதிகள் அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக 20 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை எடுத்தே தீர வேண்டும்.மேலும் ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் செல்லும் போது 10 நாட்கள் விடுமுறையை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.