அடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்தாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். இது குறித்துஅவர் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்.8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான கணினி வழங்கப்படும் .
அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் வரையில் மருத்துவகல்வியில் சேர்ப்பதே அரசின் லட்சியம். 12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவியர் 500 பேர் வரை ஆடிட்டிங்கில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றார்.