கலெக்டர்களுக்கு கடிதம்

சென்னை பணிக்கு வராத, வருவாய் துறை ஊழியர்கள் குறித்த விபரங்களை
அனுப்பும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் துறை நிர்வாக ஆணையர், சத்யகோபால், கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: வருவாய் துறை ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 'கஜா' புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, ஊழியர்கள் அனைவரும் உடனடியாக, பணிக்கு திரும்ப வேண்டும். திரும்பாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலைக்கு வராதவர்கள் விபரத்தை, அரசுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.