FLASH NEWS ;அரையாண்டு வினாத்தாள் திருட்டு

தேவக்கோட்டை: சிவகங்கை தேவக்கோட்டையில் என்எஸ்எம்ஜிபிஎஸ் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12 ம் வகுப்புகளுக்கான அரையாண்டு
தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வினாத்தாள் வைக்கப்படும். இந்நிலையில், பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அனைத்து வகுப்புகளுக்கும் வைக்கப்பட்டிருந்த அனைத்து பாடங்கள் வினாத்தாளை திருடி சென்றனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.