பகுதி நேர பி.இ., படிப்பு நாளை மறுநாள் பதிவு நிறைவு

சென்னை: அண்ணா பல்கலையின் பகுதி நேர படிப்புக்கு, மாணவர் சேர்க்கை பதிவு,
நாளை மறுநாள் முடிகிறது.அண்ணா பல்கலை சார்பில், பகுதி நேர, பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, நவம்பர், 5ல் துவங்கியது; 30ல் முடிவதாக இருந்தது.'கஜா' புயல் பாதிப்பு காரணமாக, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், வரும், 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது.