ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு எதிராக வழக்கு

மதுரை : ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட் கிளையில்
மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கஜா புயல் பாதிப்பு, அரையாண்டு தேர்வு சமயத்தில் போராட்டம் நடத்துவதால் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்கப்பட்டிருந்தது. கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இன்று(டிச.,3) பகல் 1 மணிக்கு இந்த அவசர வழக்கை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு விசாரிக்கும் என தெரிவித்துள்ளனர்.