வங்கக்கடலில் புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள்
கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்லது.
மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.