பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகப்பட்டினம்: நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


தமிழக கடலோர பகுதிகளில் வலுவான காற்றழுத்த தாழ்வு நிலவுவதாலும், கனமழை காரணமாகவும் புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


தேர்வு ஒத்திவைப்பு
திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை(நவ.,22) மற்றும் 23ம் தேதி நடக்கவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.தஞ்சை மன்னர் சரபோஜி மன்னர் கல்லூரியிலும் நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.