ஊதிய உயர்வு, அரசு புதிய சலுகை!

அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுகிற மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால், ஓய்வு பெற்றவர்களுக்கும், அதை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்படும்போது, அது, அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தது.


இந்நிலையை மாற்ற, ஓய்வு பெறுகிற அடுத்த நாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால், அந்த உயர்வு சம்பளத்தை, ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க, அரசு ஆணையிட்டுள்ளது.அதேபோல், ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டாலும், அதைவழங்கலாம் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.