LKG பாட திட்டம் கருத்து கூற அவகாசம்

எல்.கே.ஜி., பாடத் திட்டம் குறித்து, பொதுமக்கள் கருத்துகளை கூறுவதற்கான அவகாசம், மூன்று நாட்களில் முடிகிறது.தமிழக பள்ளி கல்வி துறையில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 


மற்ற வகுப்புகளுக்கு, அடுத்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அமலாகிறது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து, அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், 'ப்ரீ.கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இதன்படி, தமிழக பள்ளி கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, எஸ்.சி.இ.ஆர்.டி., புதிய பாட திட்ட வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. 

இதன் விபரங்கள், http://www.tnscert.orgஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.வரைவு அறிக்கையில் உள்ள அம்சங்களில், எதை சேர்க்க வேண்டும்; எதை நீக்க வேண்டும்; எந்த பகுதிகள் வேண்டாம் என, பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கான அவகாசம், இன்னும் மூன்று நாட்களில் முடிகிறது. கருத்துகளை, awpb2018@gmail.com என்ற, 'இ-மெயில்' முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.