![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/95/dc/9f/95dc9f614082e1295898819925c9bffe.jpg)
மக்களின் இன்றைய முழு நேர விவாதமே ரெட் அலர்ட் தான். அன்றைய தினம் எப்படி இருக்கும், வெளியில் செல்ல முடியுமா? அன்றாடப் பணிகளை பார்க்க முடியுமா என்ற ஆயிரமாயிரம் கேள்விகள் பொதுமக்களுக்கு எழத்தான் செய்யும்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் தெளிவுபடுத்துகிறது.
அதில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால், மழை எச்சரிக்கை என்பது நான்கு வகைப்படும்.
பச்சை நிறம் - மிதமான மழைக்கு வாய்ப்பு. (நடவடிக்கை தேவையில்லை)
மஞ்சள் நிறம் - ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு. (வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனிக்க வேண்டும்)
ஆரஞ்சு நிறம் - ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை (தயாராக இருக்க வேண்டும்)
சிவப்பு நிறம் - பரவலாக மிக அதிகக் கன மழைக்கு வாய்ப்பு. (தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும், நிவாரணப் பணிகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்)
மிக அதிகக் கன மழை என்றால் எவ்வளவு? மஞ்சள் நிறம் - ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு. (வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனிக்க வேண்டும்)
ஆரஞ்சு நிறம் - ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை (தயாராக இருக்க வேண்டும்)
சிவப்பு நிறம் - பரவலாக மிக அதிகக் கன மழைக்கு வாய்ப்பு. (தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும், நிவாரணப் பணிகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்)
மிக அதிகக் கன மழை என்றால் 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரையிலானதாக இருக்கும். அதே சமயம், குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
![](http://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/64/f5/e3/64f5e328784670025d11335ab48f41b3.jpg)
![](http://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/de/ae/c9/deaec9a7f57d6c5cf57a3d1538773f63.jpg)