விஜயதசமி :மாணவர் சேர்க்கை பள்ளிகளுக்கு அனுமதி

தமிழகம் முழுவதும், நாளை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை, 'அட்மிஷன்' என்ற, சிறப்பு மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் நடத்துகின்றன.


இந்த வகையில், இந்த ஆண்டும், விஜயதசமிக்கு மாணவர்களை சேர்க்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுமதி அளித்துள்ளார். ஏற்கனவே, அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், அக்., 31 வரை மாணவர்களை சேர்க்கவும், ஆசிரியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.