பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பாலித்தீன் பொருட்களை பயன்படுத்த கூடாது
என்ற உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதை மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்