10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'

சென்னை, : பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று
அறிவிக்கப்படுகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்புக்கான துணை தேர்வை, செப்டம்பரில் எழுதியோர், தேர்வு முடிவை இன்று தெரிந்து கொள்ளலாம். இன்று பிற்பகல் முதல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக பதிவிறக்கம் செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.மறுகூட்டலுக்கு, நாளை மற்றும் நாளை மறுநாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று, விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.