10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில், கடலோரம் அல்லாத மாவட்டங்களுக்கு, இன்று முதல், இரண்டு நாட்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழையின்
தொடர்ச்சியாக, நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, பேச்சிப்பாறையில், 10 செ.மீ., மழை பதிவானது. ஏற்காடு, தாராபுரம், வால்பாறை, 4; தர்மபுரி, குன்னுார், போளூர், திருப்பூர், உடுமலை பேட்டை, 3; காங்கேயம், குன்னுார், கொடைக்கானல், இரணியல், பெரியகுளம், பவானி சாகர், சத்தியமங்கலம், 2 செ.மீ., மழை பெய்து உள்ளது.இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை, கோவை, திண்டுக்கல்லில் சில இடங்களில் கன மழை பெய்யும். நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை, திருவள்ளூர், சேலம், வேலுார், திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய, 10 மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யலாம் என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.