'சித்தா' படிப்புக்கு 3,600 பேர் மனு

சென்னை: இந்திய மருத்துவ முறை படிப்புகளில் சேர, 3,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்.சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா போன்ற,
இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதற்கான விண்ணப்ப வினியோகம், ஆக., 14ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, நேற்று கடைசி நாள். நேற்று மாலை வரை, 3,600 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரி கூறியதாவது:தமிழகத்தில், நடப்பாண்டில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகளின் பட்டியலை, ஆயுஷ் அமைச்சகம் இன்னும் அளிக்கவில்லை.அந்த பட்டியல் கிடைத்தப்பின், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினர்.