தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு - முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மத்திய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல்-அமைச்சர் பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7% ல் இருந்து 9%ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1157 கோடி செலவு ஏற்படும்.

அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4500 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.  ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ. 2,500 வரை கூடுதலாக கிடைக்கும்.