தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள புதிய கால
அட்டவணைப்படி, தாம்பரம்-செங்கோட்டை இடையே இருமார்க்கமாகவும் தினசரி
அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு
புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16189), இரவு 10.30 மணிக்கு
செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து காலை 6
மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (16190), இரவு 10.15 மணிக்கு
தாம்பரத்தை வந்தடையும்.
தினசரி இயக்கப்படும் இந்த ரெயில் 16
முன்பதிவில்லா பெட்டிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய
ரெயில் இயக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.