மருத்துவ இடங்கள் 'ஹவுஸ்புல்'

சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு
இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஒமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. இதற்கு அழைக்கப்பட்ட, 1,495 மாணவர்களில், 203 பேர் பங்கேற்றனர்.இதில், நிர்வாக ஒதுக்கீட்டில், மீதமிருந்த, 91 இடங்களும் நிரம்பின. தனியார் கல்லுாரிகளில் உள்ள, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவுக்கான கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது.