நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய இரண்டு குழு அமைப்பு: அரசாணை வெளியீடு

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும்நல்லாசிரியர் விருதுக்குரிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக மாவட்ட 
ளவிலும்,மாநில அளவிலும் குழுக்களை அமைத்து அரசுஉத்தரவிட்டுள்ளதுஇது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவதுடாக்டர் ராதாகிருஷ்ணன்விருது பெற தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காகபள்ளிக் கல்விஇயக்குநரின் தலைமையில் 11 பேர் கொண்ட மாநில அளவிலான தேர்வுக்குழு அமைத்துஆணை வெளியிடப்பட்டதுஇந்நிலையில்பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள்ஒருங்கிணைக்கப்பட்டு கல்வி மாவட்டங்கள் 67 ஆக இருந்தவை 120 கல்விமாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.அதனால் விருது பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும்ஆசிரியர்களை தேர்வுசெய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர்அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்பள்ளிக் கல்வி இயக்குநரின் பரிந்துரையை அரசுகவனமுடன் ஆய்வு செய்து மாவட்டமாநில அளவிலான குழுவுக்கு வழிகாட்டுநெறிமுறைகளை வகுத்து ஆணையிடுகிறதுஇதன்படிமாவட்ட பள்ளிகளில் உள்ளஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் விருது வழங்க வேண்டும்அதில் சென்னை,கோவைஈரோடுகாஞ்சிபுரம்,மதுரைசேலம்திருநெல்வேலிதிருவள்ளூர்திருச்சி,வேலூர்விழுப்புரம்திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு 144 விருதுகள்,அரியலூர்கடலூர்திண்டுக்கல்கன்னியாகுமரிகிருஷ்ணகிரிநாகப்பட்டினம்,புதுக்கோட்டைராமநாதபுரம்,

சிவகங்கைதஞ்சாவூர்திருப்பூர்தூத்துக்குடிவிருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு 130விருதுகள்தர்மபுரிகரூர்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்தேனிதிருவாரூர் ஆகியமாவட்டங்களுக்கு 56 விருதுகள்என மொத்தம் 330 விருதுகள் வழங்கப்பட வேண்டும்.இது தவிர சுயநிதிமெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இருந்து தலா ஒரு மாவட்டத்துக்குஒருவர் என 32 பேர்ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இருந்து 2 பேர்சமூக பாதுகாப்புபள்ளிகள் 2, மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் 3 பேர் என39 பேருக்கு விருது வழங்கப்படவேண்டும்.


மாவட்ட அளவில் உள்ள குழுவும்மாநில அளவிலான குழுவும் பின்பற்ற வேண்டியநடைமுறைகள்நெறிமுறைகள் விவரம்:

ஜூலை மாதம் விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்ககோரப்பட வேண்டும்.



ஆய்வு அலுவலர்கள் தங்கள் பள்ளிகள் பார்வையின்போது கண்டறிந்த சிறந்தஆசிரியர்களை மாவட்ட தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு மாவட்ட குழுசென்று அவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து மதிப்பீடு செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிப்பேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில்உரிய அலுவலர்களால் சரிபார்க்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் 20 வருடங்களும்ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 15 வருடங்கள்பணியாற்றி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் செப்டம்பர் 30ம் தேதிக்கு முன் வயது முதிர்வின்காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பரிந்துரை செய்யக் கூடாதுஆசிரியர்கள் கல்விஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் பணிபுரிந்தவராக இருத்தல்வேண்டும்


.
விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல்,தூய்மையானவராக இருக்க வேண்டும்அரசியலில் தொடர்பு இருக்க கூடாது.

வணிக ரீதியாக செயல்படும் ஆசிரியர்களையும்நடத்தை விதிகளுக்கு முரணாகஇருக்கும் ஆசிரியர்களையும் தேர்வு செய்யக் கூடாது.

தமிழாசிரியர்கள்சிறப்பு ஆசிரியர்கள்ஓவிய ஆசிரியர்கள்உடல் கல்வி ஆசிரியர்கள்,கைத்தொழில் ஆசிரியர்கள்இசை ஆசிரியர்கள்  கியோரை பரிந்துரைக்கும் போதுகவனத்தில் கொள்ள வேண்டும்இவ்வாறு அரசாணையில் முதன்மைச் செயலாளர்பிரதீப்யாதவ் தெரிவித்துள்ளார்.