பி.ஆர்க்.,
படிப்புக்காக, தமிழக அரசு நடத்திய, நுழைவு தேர்வின் முடிவுகள் நாளை
வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.ஆர்க்., என்ற, கட்டட
கலை படிப்பில் சேர, 'நாட்டா' என்ற தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். தமிழகத்தில், இந்த தேர்வு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு
குறைவாக இருப்பதால், பலர் தேர்வை எழுதாமல், பி.ஆர்க்., படிப்பில் சேர
முற்படுகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு, நாட்டா தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, சமீபத்தில், கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அதில் குறைவான இடங்களே நிரம்பின. எனவே, தமிழக அரசு சார்பில், தனியாக நுழைவு தேர்வு, ஆகஸ்ட், 11ல், நடத்தப்பட்டது. அதில், 584 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. மாறாக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரலாம். தமிழக அரசு நடத்திய, நுழைவுத் தேர்வின், விடைத்தாள் திருத்தம் முடிந்துள்ள நிலையில், நாளை தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வர்களுக்கு, மொபைல்போன் மற்றும், இ - மெயில் வழியாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு, நாட்டா தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, சமீபத்தில், கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அதில் குறைவான இடங்களே நிரம்பின. எனவே, தமிழக அரசு சார்பில், தனியாக நுழைவு தேர்வு, ஆகஸ்ட், 11ல், நடத்தப்பட்டது. அதில், 584 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. மாறாக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரலாம். தமிழக அரசு நடத்திய, நுழைவுத் தேர்வின், விடைத்தாள் திருத்தம் முடிந்துள்ள நிலையில், நாளை தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வர்களுக்கு, மொபைல்போன் மற்றும், இ - மெயில் வழியாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும்.