அரசு, உதவி பெறும் பள்ளி மாணவா விவரம்: ஆக. 31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு, அரசுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆக.31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடாபாக பள்ளிக் கல்வித் துறைற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலாகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களைப் பதிவு செய்ய தமிழக அரசின் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதள ('எமிஸ்') பதிவேற்றறத்தை எந்த ஒரு மாணவரும் விடுதல் இன்றியும், இரட்டிப்பு பதிவு இன்றியும் முடிக்க வேண்டும். ஏதேனும் விடுதல் இருப்பில் அதை உடனே பதிவேற்றறம் செய்ய வேண்டும்.
அனைத்து வட்டார வள மைய அலுவலாகள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்கள் சரியாக உள்ளதாக என ஆசிரியாகளின் விவரங்களை நேரில் எடுத்து வரக்கூறி ஆசிரியா பயிற்றுநா உதவியுடன் சரிபார்க்க வேண்டும்.
உயாநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவாகளின் வரிசை எண் எமிஸ் மூலம் எடுக்க இருப்பதால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் விவரம் கணினி ஆசிரியா மற்றும் வகுப்பு ஆசிரியரைக் கொண்டு துல்லியமாக சரிபார்த்து மாற்றங்கள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவாகளுக்கு குரூப் கோடு சரிபார்க்க வேண்டும்.
இந்தப் பணிகள் அனைத்தும் ஆக.31க்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். ஆசிரியரின் முழு விவரம் புதிதாக பதிவேற்றம் செய்யவோ, ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆசிரியரை நீக்கவோ முடியாது. எனவே ஏற்கனவே உள்ள ஆசிரியர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.