இன்ஜினியரிங் கவுன்சிலிங் 21 ஆயிரம் பேருக்கு, 'சீட்'

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங் இறுதி சுற்றில், 21 ஆயிரம் பேர், இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், 1.70 லட்சம் பொது
பிரிவு இடங்களுக்கான, மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை வழியாக, மொத்தம் ஐந்து சுற்றுகளாக, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதில், நான்கு சுற்றுகளில், 51 ஆயிரத்து, 990 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். இறுதியாக, ஐந்தாம் சுற்றில், நேற்று தோராய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.அதன்படி, 27 ஆயிரத்து, 951 பேர், இறுதி சுற்றில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 21 ஆயிரத்து, 992 பேர் விருப்ப பதிவு செய்தனர். இதில், 21 ஆயிரத்து, 647 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த மாணவர்கள், இன்று மாலை, 5:00 மணிக்குள், தங்கள் இடங்களுக்கு ஒப்புதல் தர வேண்டும். இதையடுத்து, இறுதி ஒதுக்கீடு, இரவு வழங்கப்படும்.