10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் +1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற பின்னால்தான், +2 தேர்வினை எழுத முடியும்.

10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக
எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுதலாம் என்று விதிமுறை இருந்தது. இந்நிலையில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு: தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித் தேர்ச்சிபெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் தற்பொழுது + 1 எனப்படும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வும் அரசு பொதுத் தேர்வாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் +1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற பின்னால்தான், +2 தேர்வினை எழுத முடியும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.