மாணவியருக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல்



மாணவியருக்கு பாலியல் தொல்லை   : ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல்

கம்பைநல்லுாரில், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால், அவர்கள் கொலை செய்யப்படுவர்' என, 'நோட்டீஸ்' வினியோகம் செய்யப்பட்டுள்ளது.


தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


அதில் கூறியிருப்பதாவது: கம்பைநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நீண்ட நாட்களாக, இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், பள்ளியில் படிக்கும், இளம் வயது திருமணம் செய்து கொண்ட, 20க்கும் மேற்பட்ட ஏழை மாணவியருக்கு, பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர்.எனவே, கலெக்டர், எஸ்.பி., இதில் கவனம் செலுத்தி, மாணவியரை காப்பாற்ற வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், எச்சரிக்கை; அந்த இரண்டு ஆசிரியர்களும், விரைவில் கொல்லப்படுவர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.