கால்நடை மருத்துவம் இன்று கவுன்சிலிங்

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.தமிழகத்தில், கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் உள்ள
கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு மற்றும், பி.டெக் படிப்புகளுக்கு, 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரியில், இன்று துவங்குகிறது.கவுன்சிலிங்கில் பங்கேற்க, 12 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இன்று, சிறப்பு பிரிவினர் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.நாளையும், நாளை மறுநாளும் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இந்த கவுன்சிலிங் நடக்கிறது.