உயர் சிறப்பு மருத்துவம் ஆகஸ்ட் 6ல் கவுன்சிலிங்

சென்னை: உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஆகஸ்ட் 6ல் நடைபெறு கிறது.நாடு முழுவதும், டி.எம்., - எம்.சி.எச்., என்ற, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, 1,215 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக, 192 இடங்கள் உள்ளன. இந்த
படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.இதன்படி, கவுன்சிலிங்கிற்கு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை, ஆகஸ்ட், 1ல் துவங்குகிறது. ஆன்லைன் கவுன்சிலிங், ஆக., 6ல் நடைபெறுகிறது. முடிவுகள் அடுத்த நாள் வெளியாகும்.கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், ஆகஸ்ட் 13க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். மேலும், விவரங்களுக்கு https://mcc.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.