நவ.15 வேலை நிறுத்தம் : அரசு ஊழியர் பங்கேற்பு

மதுரை: அத்தியாவசிய பொருள் விலை உயர்வு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தேசிய அளவில் நவ., 15ல் நடக்கும் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
பங்கேற்கிறது.அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் இப்போராட்டம் நடக்கிறது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் 3.82 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 80 லட்சம் இளைஞர்கள், அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். வேலைவாய்ப்பை தட்டி பறிக்கும் வகையில் பணியாளர் சீரமைப்பு குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது. இதுகுறித்த அரசாணை மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 29ல் அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்கு நடத்தப்படும். ஆக., 21ல் மாணவர்களுடன் இணைந்து மனித சங்கிலி நடத்தப்படும். நவ., 15ல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.