''பாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடிக்கும்,'' :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

''பாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடிக்கும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - இன்பதுரை: ஆண்டு கணக்கை கூறுகை யில், கி.மு., - கி.பி., என, குறிப்பிடுவதற்கு பதில், பள்ளி பாடப்புத்தகங்களில், 'பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின்' என குறிப்பிடப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது, வரலாற்று பிழையாகி விடும். எனவே, பழைய முறையை பின்பற்ற வேண்டும்.

காங்., - பிரின்ஸ்: கி.மு., - கி.பி., நீக்கப்பட்டது, சிறுபான்மையினரிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்: பாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடிக்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது.