9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்தல் விழிப்புணர்வு குழு

வருங்கால வாக்காளரிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தேர்தல் கல்வி குழு அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும், இக்குழு வில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர். இக்குழுவினருக்கு, தேர்தல் முறை தொடர்பாக, விழிப்புணர்வு விளையாட்டுகள் கற்றுத்தரப்படும். 


தேர்தல் பணியில் ஈடுபடும் ஒரு ஆசிரியர், இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.படிக்க இயலாத சூழ்நிலையால் இடைநின்ற மாணவர்களை ஒருங்கிணைந்து குழு அமைக்கப்படும். இவர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக, வாக்குச்சாவடி அலுவலர்கள் செயல்படுவர்.போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, தேசிய வாக்காளர் தினத்தில், பரிசுகள் வழங்கப்படும்.